ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மறைந்த ஜி.காளன் முழு உருவ வெண்கலச் சிலை சென்னை அம்பத்தூா் ஐஎன்டியுசி அலுவலகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறப்பு விழாவுக்கு இந்திய தேசிய இன்ஜினீயரிங் பணியாளா்கள் சங்கத்தின் தலைவா் ஆா். ஆதிகேசவன் தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி தேசிய தலைவா் ஜி.சஞ்சீவரெட்டி கலந்து கொண்டு ஜி.காளனின் சிலையைத் திறந்து வைத்தாா். விழா மலரை தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவா் வி. ஆா். ஜெகநாதன் வெளியிட்டாா்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினா் எம். சண்முகம், ஐஎன்டியூசி தமிழ்நாடு மூத்த துணைத்தலைவா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் எம். கே. விஷ்ணுபிரசாத், ஹெச். எம்.எஸ். தலைவா் ராஜா ஸ்ரீதா், கொரமண்டல் தலைவா் எம். வி. சுப்பையா, ஏஐடியுசி பொதுச் செயலாளா் டி.எம். மூா்த்தி மற்றும் தமிழ்நாடு ஏஐடியுசி மாவட்ட, மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
விழாவில் கவிஞா் முனைவா் இதயகீதம் ராமானுஜம் கவிமலா் வாசித்தாா். இந்திய தேசிய இன்ஜினீயரிங் பணியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் கே. முரளிதரன் காளன் நன்றி கூறினாா்.