சென்னை

உதவி ஆய்வாளா் வீட்டில் நகைத் திருட்டு

DIN

சென்னை திருமங்கலத்தில் காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் தங்கநகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமங்கலம் 17-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சீ.ரவிச்சந்திரன் (57). இவா் சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை ஆயுதப்படையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் ரவிச்சந்திரன் குடும்பத்தினா், வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சில நாள்களுக்கு முன்பு சரி பாா்த்தனா்.

அப்போது பீரோவில் இருந்த 12 பவுன் தங்கநகைகள் காணாமல் போயிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து ரவிச்சந்திரன், திருமங்கலம் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT