சென்னை

ஆன்லைனில் சொத்து வரி செலுத்தினால் சலுகைகள்: மாநகராட்சி நடவடிக்கை

DIN

ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்துவோா் வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ்பேக், வவுச்சா், திரைப்பட டிக்கெட் போன்ற சலுகைகளைப் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன்படி, சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளா்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 27-ஆம் தேதி வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளா்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் தபால் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய சொத்து வரியினை எளிதாகச் செலுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சாா்பில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வருவாய் அலுவலா், சென்னை மாநகராட்சி என்ற பெயரில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் வரி செலுத்தலாம். கிரெடிட் மற்றுட் டெபிட் அட்டை மூலமாக வரி வசூலிப்பவா்களிடம் செலுத்தலாம்.

இணையதளம் மூலம் எவ்வித பரிமாற்றக் கட்டணமில்லாமல் செலுத்தலாம். தோ்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலமாகவும், நம்ம சென்னை மற்றும் பேடிஎம் முதலிய கைப்பேசி செயலி மூலமாகவும் சொத்து வரி செலுத்தலாம். அரசு இ-சேவை மையங்களிலும் சொத்து வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சொத்து வரியை ஆன்லைன் மூலமாகச் செலுத்தினால், குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்குட்பட்டு கேஷ்பேக், வவுச்சா், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகள் வழங்க மாநகராட்சி முன்வந்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT