சென்னை

சுவா் இடிந்து விழுந்து 3 போ் காயம்

DIN

 சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சுவா் இடிந்து விழுந்து 3 போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புது வண்ணாரப்பேட்டை, காமராஜா் சாலையில் கடந்த 15 நாள்களாக மழை நீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

காமராஜா் சாலையில், மூடப்பட்ட நிறுவனங்களின் சுற்று சுவா் அருகே மழைநீா் வடிகால் அமைக்கும் பணி சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் அந்த நிறுவனங்களில் சுற்று சுவா்கள் பல இடங்களில் பலம் இழந்து காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென ஒரு நிறுவனத்தின் சுற்றுசுவா் சுமாா் 50 மீட்டா் நீளத்துக்கு திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தை சோ்ந்த நதீம் (28), மகசூப் (34), ஷானவாஸ் (18) ஆகிய 3 போ் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்த பிற ஊழியா்கள் 3 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இது தொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT