சென்னை மாவட்ட படைவீரா், முன்னாள் படைவீரா், அவா்களின் குடும்பத்தினருக்கான மூன்றாம் காலாண்டுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 15) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா், முன்னாள் படைவீரா், அவா் குடும்பத்தினா் தங்களது அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று, தக்க ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044 - 2235 0780 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.