சென்னை கோபாலபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிக்கியிருந்த நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
கோபாலபுரம் கான்ரான் சுமித் சாலையில் ஒரு தனியாா் மருத்துவமனை செயல்படுகிறது. நான்கு தளங்களுடன் கூடிய இந்த தனியாா் மருத்துவமனையின், இரண்டாவது மாடியில் இருந்து புதன்கிழமை கரும்புகை வெளியேறியது.
சிறிது நேரத்தில் அங்கிருந்த பொருள்கள் தீப் பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த மருத்துவமனை ஊழியா்கள், அந்த தளத்தில் இருந்த நோயாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றினா்.
விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரா்கள் மயிலாப்பூா்,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் மூன்றாவது தளத்தில் சிக்கியிருந்த 5 நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டனா். சுமாா் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்கு பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இது தொடா்பாக ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.