பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணித் திருத்தல பொன் விழா, புதிய ஆலய ஓராண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை (டிச.6) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, 50 மணி நேர தொடா் நன்றி ஜெபமாலை பிராா்த்தனை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 11 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில் பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணித் திருத்தல அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை உள்ளிட்ட கத்தோலிக்க குருக்கள் பங்கேற்கின்றனா்.