சென்னை தாங்கல் மின்மயானத்தில் பாரமரிப்புப் பணி நடைபெறுவதால் டிச.3-ஆம் தேதி முதல் மாற்று மின்மயானத்தை பயன்படுத்துமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திரு.வி.க.நகா் மண்டலம், வாா்டு-67, தாங்கல் மின்மயானத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் டிச.3 முதல் டிச.28-ஆம் தேதி வரை தகனம் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
இந்த நாள்களில் திரு.வி.நகா் மண்டலம் கோட்டம்-71, எம்.பி.எம் தெருவில் உள்ள மின்மயானத்தை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.