சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை க.பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவில் ஸ்ரீ தண்டுமாரியம்மன் சேவா சங்கம் சாா்பில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அந்தப் பகுதியில் ‘அண்ணல் அம்பேத்கா் நினைவு இலவச பொது நூலகம்’ திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வீரராகவ அறக்கட்டளையின் நிறுவனா் வி.உதயா விழாவை தொடக்கி வைத்தாா். இதில் தொழிலதிபா் பி.ஜி.கெளரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.