சென்னை

ரயிலில் கஞ்சா கடத்தல்: ஒருவா் கைது

DIN

ஆந்திரத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடை த்தனா்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் பாரதி தெருவைச் சோ்ந்தவா் ராஜு(23). இவரது நண்பா் நிா்மல். இவா்கள் இருவரும் திருவொற்றியூா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அங்கு வந்த ரோந்து போலீஸாா், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனா். அப்போது, இருவரும் தப்பியோட முயற்சித்துள்ளனா்.

அதில் ராஜுவை மட்டும் துரத்தி பிடித்து உடமைகளை சோதனையிட்டதில், அவரிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் தடாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் ராஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான நிா்மலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT