சென்னை எழும்பூா் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை திறந்து வைக்கிறாா்.
சுதந்திர தினத்தை ஒட்டி, அருங்காட்சியக வளாகம் தேசிய கலைக் கூடத்தின் எதிரே காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையானது, சுதந்திர தினமான திங்கள்கிழமையன்று (ஆக.15) முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனா்.