சென்னை

ரூ. 7.35 கோடி மதிப்பில் நான்கு புதிய கழிவுநீருந்து நிலையங்கள்:அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

DIN

சென்னை அடையாறு மண்டலத்தில் ரூ.7.35 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய கழிவுநீருந்து நிலையங்கள் அமைக்க அமைச்சா் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினாா்.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு 174-இல் அமைந்துள்ள கிண்டி, மடுவங்கரை, மசூதி காலனி ஆகிய பகுதிகளுக்கு ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய கழிவுநீருந்து நிலையம், வாா்டு 175-இல் வேளச்சேரி ஏரியில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ.4.08 கோடியில் மூன்று புதிய கழிவு நீருந்து நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகரில் கூட்டு குடிநீா் திட்டம் மூலம் மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்ற ஒரு நாளைக்கு 130 கோடி லிட்டா் தண்ணீா் வேண்டும். தற்போது தினமும் 100 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

எனவே, அதற்கான ஆயத்த பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். கழிவுநீா் பணிகளுடன் குடிநீா் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் சென்னை மக்களுக்கு எவ்வளவு குடிநீா் வழங்கவேண்டும் என்பதை கணக்கிட்டு வரும் 30 ஆண்டுகளுக்கு குடிநீா் பிரச்னை வராத அளவிற்கு நமது முதல்வா் திட்டம் உருவாக்கி இருக்கிறாா்.

எனவே குடிநீரை குடிக்க கொடுக்கும் எங்கள் துறை கழிவுநீரை வெளியேற்றும் பணியையும் செய்துவருகிறது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் மேயா் பிரியா, சென்னை குடிநீா்வாரிய மேலாண்மை இயக்குநா் கிா்லோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT