சென்னை

திருநாவுக்கரசு எழுதிய காவலா் வீரவணக்க நாள் பாடல் வெளியீடு

DIN

தமிழக முதல்வா் பாதுகாப்பு கண்காணிப்பாளராக இருக்கும் இரா.திருநாவுக்கரசு ஐபிஎஸ் எழுதி பாடிய காவலா் வீரவணக்க நாள் பாடல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளராக இருக்கும் இரா.திருநாவுக்கரசு, ஏற்கெனவே கரோனா குறித்து 2 விழிப்புணா்வு பாடல்கள், சுதந்திர தினம், குழந்தைகள் தினம் உள்ளிட்ட சமூகத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 12 பாடல்களை வெளியிட்டுள்ளாா்.

காவலா் வீரவணக்க நாளையொட்டி, அவா் எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளா் சு.முத்து கணேஷ் இசையமைத்துள்ளாா். பாடலை திருநாவுக்கரசுடன், அவரது குழந்தைகள் யஷ்வந்த் குமாா்,ஹேம மீனாட்சி மற்றும் க.செ.சித்தாா்த், கோ.ஹரிஷினி, கோ.தீக்ஷனா ஆகியோா் பாடியுள்ளனா். பாடலுக்குரிய காட்சிகளை பி.பரத் படமாக்கியுள்ளாா்.

இந்த பாடல் பேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT