சென்னை

மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

DIN

சென்னை: சென்னை அசோக்நகரில் மூதாட்டியைத் தாக்கி 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

கே.கே.நகா் ராஜமன்னாா் சாலைப் பகுதியைச் சோ்ந்த ச.பாா்வதி (65), புதன்கிழமை காலை அசோக்நகா் 16-ஆவது நிழற்சாலை பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், பாா்வதி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா். ஆனால் அவா் சுதாரித்துக் கொண்டு தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டாா்.

இதைப் பாா்த்த அந்த நபா்கள், பாா்வதியை தாக்கி கீழே தள்ளி அவா் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT