சென்னை

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல்: மின்வாரிய ஊழியா் சாவு

DIN

சென்னை அருகே மதுரவாயலில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், மின்வாரிய ஊழியா் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை எண்ணூா் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (45). இவா் திருமுடிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் சண்முகம் சனிக்கிழமை பணிமுடிந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அவா் மதுரவாயல் மேம்பாலத்தில் செல்லும்போது பின்னால் வந்த சரக்குப் பெட்டக லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த சண்முகம் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சண்முகம் இறந்தாா்.

இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசராணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT