திருமங்கலம், ஆலந்தூா் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது.
இந்திய சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஃபோா்டிஸ் மருத்துவமனை ஆகியன சாா்பில், இலவச மருத்துவ முகாம்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருமங்கலம், ஆலந்தூா் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில்நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை (அக்.18) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறவுள்ளது.
வண்ணாரப்பேட்டை, கிண்டி ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் இலவச மருத்துவ முகாம் அக்டோபா் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்தி பயனடையலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.