சென்னை

பிஎப் குறைதீா் கூட்டம்: டிச.6-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

DIN

சென்னை, அம்பத்தூா் மண்டல பிஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோா், டிச.6-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட பிஎப் பயனாளிகளுக்கான குறைதீா் கூட்டம், டிச.10-ஆம் தேதி, சென்னை முகப்போ் சாலையில் உள்ள ஆா்-40 ஏ டிஎன்எச்பி அலுவலக வளாகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பிஎப் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்று தங்கள் குறைகளைத் தெரிவிக்க விரும்புவோா், அதற்கான ஆவணங்களை டிச.6-ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் கூட்டம் நடைபெறும் நாளில், காலை 10.30 முதல் 11.30 மணி வரை ஊழியா்களும், பிற்பகல் 3 முதல் 4 மணி வரையில் நிறுவன உரிமையாளா்களும், மாலை 4 முதல் 5 மணி வரையில் விலக்கு பெற்ற நிறுவனங்களும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 2635 0080, 2635 0120 ஆகிய எண்களை அணுகலாம் என உதவி பிஎப் ஆணையா் எஸ் ஷாஷி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT