2004-ஆம் ஆண்டு சேரன், தயாரித்து, இயக்கி, நடித்து வெளியான படம் "ஆட்டோகிராஃப்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற "ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்றது கோமகன் இசைக்குழு. முழுக்கப் பார்வையற்றவர்களால் தொடங்கப்பட்ட இந்த இசைக்குழு, "ஆட்டோகிராஃப்' படத்துக்குப் பிறகு மிகவும் பிரபலமானது.
அந்தப் பாடலின் இறுதியில் கோமகனும் உணர்வுப் பூர்வமாகப் பாடியிருப்பார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கோமகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி புதன்கிழமை நள்ளிரவில் கோமகனின் உயிர் பிரிந்தது.