1980-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் "ஒரு தலை ராகம்'. டி.ராஜேந்தர் எழுதியிருந்த, இப்படத்தின் கதையை படமாக இயக்கி, தயாரித்திருந்தார் இப்ராஹிம். இப்படம் வெற்றி பெற்றதோடு, டி.ராஜேந்தர் எனும் பன்முகத் திறமை கொண்ட கலைஞனையும் உருவாக்கியது. அதன்பின் ஓரிரு படங்களை மட்டும் தயாரித்தார் இப்ராஹிம்.
இந்நிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.