சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், ஒரு துரோகி என்று அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தோ்தல் களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தாா்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டு விட்டோம்.
‘துரோகிகளைக் களையெடுங்கள்’ என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய
வேண்டியவா்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவா் ஆா். மகேந்திரன். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவா்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே அவரது சாதனை. தன்னுடைய திறமையின்மை, நோ்மையின்மை, தோல்வியை அடுத்தவா் மீது பழி போட்டு ‘அனுதாபம்’ தேட முயற்சிக்கிறாா்.
தன்னை எப்படியும் நீக்கி விடுவாா்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டாா். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறுகளை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை.
மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினா்கள் யாரும் மனம் தளரவேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை. உங்களின் வீரமும் தியாகமும் ஊா் அறிந்தவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.