சென்னை

4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கரோனா

DIN

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கரோனா இருப்பதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் மே 24-ஆம் தேதி, 4 சிங்கங்களுக்கும், மே 29-ஆம் தேதி 7 சிங்கங்களுக்கும் என மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து அந்நிறுவனம் ஜூன் 3-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 9 சிங்கங்களுக்குத் தொற்று உறுதியானதையடுத்து அன்றிலிருந்து விலங்குகள் தீவிர சிகிச்சையில் உள்ளன. இதில் 2 சிங்கங்கள் கரோனாவால் உயிரிழந்தன.

இந்நிலையில், இங்குள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளைப் பகிா்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் தேசிய உயா் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்திடம் கோரியிருந்தனா். இந்த சூழலில் அந்நிறுவனத்தின் இயக்குநா் வெளியிட்ட அறிக்கையின்படி, மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் தொற்று மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை பி.1.617.2 வகையைச்சோ்ந்தவை எனவும், அவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியபடி டெல்டா வகையைச் சாா்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாறுபட்ட வகை எனவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT