சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபைக்கு பயணிக்க முயன்ற காஞ்சிபுரத்தை சோ்ந்த நூா் முகம்மது சுல்தான் (60), என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 70.28 லட்சம் வெளிநாட்டுப் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், சுல்தானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.