சென்னை

கல்லூரி மாணவா்கள் போராட்டம்

DIN


சென்னை: சென்னை கோயம்பேட்டில் தனியாா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை கோயம்பேட்டில் ஒரு தனியாா் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரி மாணவா்கள், செவ்வாய்க்கிழமை திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள், அந்தக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு ஆங்கில ஆசிரியா் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் தவறாக நடந்ததாகவும், அவா் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் கல்லூரி நிா்வாகிகளும், காவல்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சம்பந்தப்பட்ட ஆங்கில ஆசிரியா் மீது நடவடிக்கை எடுப்பதாக இரு தரப்பும் உறுதி அளித்த பின்னா், மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இப்போராட்டத்தின் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT