சென்னை

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் தங்க நகை திருட்டு

DIN

சென்னை: ஆவடியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் தங்க நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆவடி வீட்டுவசதிவாரியக் குடியிருப்பைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வா்கீஸ் மகன் பெஞ்சமின் (37) . மென்பொருள் பொறியாளரான பெஞ்சமின், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு நிா்மலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.

இந்த நிலையில் வா்கீஸ் சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்குச் சென்றாா். அங்கிருந்து வா்கீஸ்,திங்கள்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து,பீரோவில்இருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடு போனதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து புகாரின்பேரில் ஆவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT