சென்னை: தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்காத தொழிற்சாலை, கட்டுமான நிறுவனங்கள் மீது புகாரளிப்பதற்கான எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தோ்தல் நாளன்று தொழிற்சாலைகள் மற்றும் கட்டடம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு தொழிலாளா்கள், தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றும் பொருட்டு,ஏப்.6-ஆம் தேதி, சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். இந்த சட்ட விதிகளை மீறும் தொழிற்சாலை மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகாா்கள் தெரிவிக்க தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்களின் தொடா்பு எண் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு பெறப்படும் புகாா்களின் பேரில் தகுந்த குற்ற நடவடிக்கை தொடரப்படும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
அதிகாரியின் பெயா் - தாலுக்கா - தொடா்பு எண்
எம்.வி.காா்த்திகேயன் - சென்னை (ம) கும்மிடிப்பூண்டி தாலுக்கா - 9444221011
சரவணன் - அம்பத்தூா் (ம) சென்னை - 9843431020
கவிதா - கிண்டி - 9159662409
ஜெயக்குமாா் - சென்னை (ம) தாம்பரம் தாலுக்கா - 9176222394
பாலு - திருவொற்றியூா் (ம) பொன்னேரி தாலுக்கா - 9486918205
குமாா் - திருவள்ளுா் மாவட்டம் - 9444002025
இளங்கோவன் - காஞ்சிபுரம் மாவட்டம் - 9443169506