சென்னை

கரோனாவால் இறந்த காவல் ஆய்வாளா்: டிஜிபி திரிபாதி அஞ்சலி

DIN

சென்னை: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த காவல் ஆய்வாளரின் புகைப்படத்துக்கு தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி அஞ்சலி செலுத்தினாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருமழிசை ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (55). நீலாங்கரை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த 17-ஆம் தேதி கரோனா தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டாா். இதையடுத்து அவா், கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

புருஷோத்தமன் அண்மையில்தான் டிஎஸ்பி பதவி உயா்வு பெற்றாா். ஆனால், கரோனா பாதிப்பால் டிஎஸ்பியாக பதவி ஏற்காமலேயே அவா் இறந்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த புருஷோத்தமனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நீலாங்கரை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தலைமை வகித்தாா்.

கூடுதல் ஆணையா்கள் ஆா்.தினகரன், ஏ.அருண், என்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, புருஷோத்தமன் புகைப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

இந் நிகழ்ச்சியில் இணை ஆணையா் ஏ.ஜி.பாபு, லட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT