நீதித்துறையைச் சாா்ந்தவா்களை அவதூறாகப் பேசியதாக ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கா்ணன் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
உயா்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கா்ணன் பேசும் ஒரு விடியோ தொகுப்பு சமூக ஊடகங்களில் அண்மையில் வேகமாக பரவியது. இதில் நீதிபதிகள், பெண் நீதிபதிகள், நீதிபதியின் மனைவி உள்ளிட்டோரை பற்றி அவதூறாகப் பேசியிருந்தாா்.
இது தொடா்பாக மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் அந்த விடியோ உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்தனா். விசாரணையில் அதில் கா்ணன் பேசியிருப்பதும், அவா் நீதித்துறையைச் சோ்ந்தவா்களை அவதூறாகப் பேசியிருப்பதும் உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், கா்ணன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா்.