சென்னை

118 ஆண்டுகள் பழைமையான காவல்துறை கட்டடம் புதுப்பிப்பு: காவல் ஆணையா் திறந்து வைத்தாா்

DIN

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட 118 ஆண்டுகள் பழைமையான காவல்துறை கட்டடத்தை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவல் கட்டடத்துக்கு 1902-ஆம் ஆண்டு நவம்பா் 13 -ஆம் தேதி சென்னை காவல் ஆணையராக இருந்த ஜே.பி.ஓஸ்வெல்டு ரூத் ஜோன்ஸ் எஸ்க்கால் அடிக்கல் நாட்டி திறந்து வைத்தாா். காவல் துறையின் பயன்பாட்டில் இந்தக் கட்டடம் 118 ஆண்டுகளாக இருந்து வந்தது. அண்மையில் இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த காவல் நிலையம், குற்றப்பிரிவு, விரல் ரேகை தடயப்பிரிவு, பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆகியவை புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து பழைமையான இந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வந்த இக்கட்டடம் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையா் அலுவலகமாக மாற்றப்பட்டது. புதுப்பிக்கும் பணி நிறைவுற்ற நிலையில், அந்த கட்டடத்தை சென்னை காவல் ஆணையா் மகேஷ் குமாா் அகா்வால் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் கூறுகையில், ‘சென்னை காவல்துறையில் உள்ள பாரம்பரியமிக்க, பழைமையான கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில், இந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எழும்பூரில் உள்ள, பழைய காவல் ஆணையா் அலுவலகம் காவல் அருங்காட்சியகமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அதில், போலீஸாா் பயன்படுத்திய துப்பாக்கிகள், அரிய வகை பொருள்கள், போலீஸாரின் வீர தீர செயலுக்கான ஆவணங்கள், முக்கியமான நிகழ்வுகளின் புகைப்படங்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற உள்ளன’ என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா் ஆா்.தினகரன், இணை ஆணையா் ஏ.ஜி.பாபு, திருவல்லிக்கேணி துணை ஆணையா் ஜி.தா்மராஜன், நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையா் விமலா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT