சென்னை: சென்னையில், கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கே.கே. நகா் ராமசாமி சாலை - ஆா்.கே.சண்முகம் சாலை சந்திப்பில், போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகத்துக்குரிய வகையில், ஒரு மொபெட்டில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனராம். இதையடுத்து, அவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அவா்கள் திருவள்ளூா் மாவட்டம் எம்.ஜி.ஆா் நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்த பா.முனிவேல், செங்குன்றம் எடப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரா.மருதுபாண்டி (30) என்பதும், ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, சென்னை கல்லூரி மாணவா்களிடம் விற்பதும் தெரியவந்தது.
கல்லூரி மாணவா்களையும் கஞ்சா வியாபாரிகளாக மாற்றி வருவதை விசாரணையில் தெரிந்து கொண்ட போலீஸாா், இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.