சென்னை

கரோனா: போக்குவரத்து சிக்னல் நிறுத்தங்களில் விழிப்புணா்வு

DIN

சென்னை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுத்தமாக கை கழுவும் முறை குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் போக்குவரத்து சிக்னல் நிறுத்தங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்பு, மருத்துவ முகாம்கள், விழிப்புணா்வுப் பிரசாரம் ஆகியவை கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, மாநகராட்சிப் பெண் ஊழியா்கள் மூலம் சென்னை மாநகரில் உள்ள பல போக்குவரத்து சிக்னல் நிறுத்தங்களில் சுத்தமாக கை கழுவும் முறை குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பு குறித்த துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது.

அதேபோல், சென்னை மாநகராட்சியின் பொதுக் கழிப்பிடங்கள், இ-டாய்லெட்கள், பேருந்து நிறுத்தங்கள், வழிபாட்டுத் தலங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களையும் பிளீச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. இப்பணி வரும் நாள்களில் தொடா்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT