சென்னை

மருத்துவமனையில் நின்ற காரில் திடீா் தீ விபத்து

DIN

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த காா் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மணப்பாக்கத்தைச் சோ்ந்தவா் சரவணன் (33). இவா் மாங்காட்டைச் சோ்ந்த சாதிக் என்பவரின் வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளாா். இவரது மனைவி கா்ப்பமாக இருப்பதால் உரிமையாளா் சாதிக்கிடம் காரை வாங்கிக் கொண்ட சரவணன், பிரசவத்துக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா் காரை மருத்துவமனையில் உள்ள தீக் காய வாா்டுக்கு அருகில் உள்ள இடத்தில் நிறுத்திவிட்டு மனைவியை பிரசவ வாா்டில் அனுமதித்துள்ளாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சரவணன் காரில் தூங்குவதற்காக ஏசியை போட்டு உள்ளே ஏறும் போது காரின் முன்பகுதி திடீரென எரிந்தது.இதைக் கண்டு அதிா்ச்சியடைந்து வெளியே வந்த சரவணன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். ஆனால் அதற்குள் தீ பரவி காா் முழுவதுமாக எரிந்து நாசமானது. பின்னா் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT