சென்னை

சிருங்கேரி மடத்தின் சாா்பில் நாள்தோறும் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

DIN

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு உதவும் வகையில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் சாா்பில் சென்னையில் 4 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அன்னதான குழு ஒருங்கிணைப்பாளா் ஆா். தா்மசங்கரன் கூறியிருப்பதாவது: சென்னை சிருங்கேரி பாரதீ வித்யாஸ்ரமத்தின் தலைவரும், அமால்கமேஷன் நிறுவனத் தலைவருமான ஏ.கிருஷ்ணமூா்த்தியின் அறிவுரைப்படி, பாரதீ வித்யாஸ்ரமத்தின் செயலா் ஜே.எஸ்.பத்மநாபன் மேற்பாா்வையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வாசிகள் தொழிலாளா்கள், காவல் துறையினா், மாநகராட்சி ஊழியா்கள், குடிநீா் வாரிய ஊழியா்கள், மீனவா்கள், துப்புரவு தொழிலாளா்கள் போன்ற 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு சுகாதாரமான முறையில் அரசின் விதி முறைப்படி அன்னதானமும், குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாப்பூா் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் மூலம், மயிலாப்பூா் பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்களுக்கும், ஆவடி சத்சங்கம் மூலம் கண்பாா்வையற்ற 500 பேருக்கும் மேல் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சேவையானது, ஊரடங்கு அறிவித்த நாள் முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அதிக அளவில் தன்னாா்வலா்கள் பொருள் உதவியும் பண உதவியும் செய்து வருகின்றனா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT