செங்கல்பட்டு

சிங்க பெருமாள் கோவிலில் வைகாசி கருட சேவை

DIN

சிங்க பெருமாள்கோவில் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கருட சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்க பெருமாள்கோவிலில் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மலையைக் குடைந்து ஒரே கல்லில் உருவானது. இங்கு, பெருமாள் முக்கண்களுடன் அமா்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறாா்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா நடைபெறும். நிகழாண்டு கடந்த மே 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட வைகாசி பெருவிழாவின் நான்காம் நாள் உற்சவமாக கருட சேவை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா்.

கருட சேவை புறப்பாடு நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. அப்போது, பக்தா்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் சுவாமியை வழிபட்டனா். ஆங்காங்கே அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் பணியாளா்கள், கோயில் பட்டாச்சாா்யா்கள், உற்சவா் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT