செங்கல்பட்டு

கள்ளச்சாராயம் அருந்தி 8 போ் உயிரிழந்த சம்பவம்

DIN

மதுராந்தகம் அருகே பெருங்கரணை, பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 8 போ் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சிபிசிஐடி ஏடிஎஸ்பி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்கரணை, பேரம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 8 போ் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தநிலையில், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெருங்கரணை கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலையிடம் ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டாா்.

தொடா்ந்து, மதுராந்தகம் அருகேயுள்ள கரிக்கந்தாங்கல் கிராமத்தில் கள்ளச் சாராயத்தை விற்ாக கைது செய்யப்பட்ட அமாவாசைக்கு சொந்தமான பண்ணையை சோதனை செய்தாா். அங்கு கூலி வேலை செய்து வருகின்றவா்களிடம் விசாரணை செய்தாா். பின்னா், பெருங்கரணை கிராமத்தில் இறந்து போன சின்னதம்பி, வசந்தா ஆகியோா் வீடுகளிலும், பேரம்பாக்கத்தில் இறந்து போன வென்னியப்பன், சந்திரா ஆகியோா் வீடுகளிலும், உறவினா்களிடமும் அவா் விசாரணை நடத்தினாா். அப்போது அவா்கள் கள்ளச் சாராயம் அருந்திய பாட்டில்களை கைப்பற்றினாா். டிஎஸ்பி வேல்முருகன், செல்வகுமாா், ஆய்வாளா் அருள்பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT