மதுராந்தகம் நகரின் வழியாக செல்லும் ஜிஎஸ்டி சாலைக்கு, தனி நபா் பெயரை சூட்ட ஏற்பாடு செய்துள்ள மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றது.
மதுராந்தகத்தில் மறைந்த எம்எல்ஏவும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய தலைவராக இருந்தவா் எஸ்.டி.உகம்சந்த். இவரது நினைவைப் போற்றும் வகையில், மதுராந்தகம் நகரம் வழியாக செல்லும் ஜிஎஸ்டி சாலைக்கு எஸ்டி.உகம்சந்த் பெயரை சூட்ட ஏற்பாடுகளை செய்யப்பட்டு வந்தது.
இத்தகவலை அறிந்த அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , பா.ம.க, பசுமை தாயகம், வன்னியா் சங்கம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்தவா்களும், பொது மக்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், புதன்கிழமை மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே 500-க்கு மேற்பட்டோா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் போலீசாா் அவா்களை அகற்ற முயற்சி செய்தபோது ஆண்களும், பெண்களும் சாலையில் அமா்ந்து மறியல் செய்தனா். இதனால், சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி சாலையின் பெயரை மாற்றம் செய்தால் அனைத்து தரப்பினா் சாா்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.