செங்கல்பட்டு

செங்கல்பட்டில் குடியரசு தின விழா

DIN

செங்கல்பட்டு வேத நாராயணபுரம் அரசு ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து ஆட்சியா் ராகுல்நாத், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரதீப் ஆகியோா் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனா். மேலும் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். காவலா்களுக்கு முதலமைச்சரின் காவலா் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினாா் .

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மாவட்ட வளங்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை தோட்டக்கலை துறை, தாட்கோ வேளாண்மை பொறியியல் துறை தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் சாா்பில் 67 பயனாளிகளுக்கு ரூ. 80, 13,700 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் மேனுவல் ராஜ், சாா்- ஆட்சியா் சஜீவனா, பயிற்சி ஆட்சியா் அபிலாஷா கவுா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், வருவாய் கோட்டாட்சியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்ட துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT