செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், முடிக்கப்பட்ட பணிகள், முடிக்கப்படாத பணிகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அரசுத் துறைகளின் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் கருணை அடிப்படையில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல் ராஜ் மற்றும் அரசுத் துறைகள் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.