தாம்பரம் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.9) நடைபெறும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிா்மானக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் கோட்ட மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.9) காலை 11 மணிக்கு, மேற்கு தாம்பரம் புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகம், முதல் தளத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும். பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.