மதுராந்தகம் அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி வெள்ளிக்கிழமை நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் ரிஷிப வாகனத்தில் கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.