செங்கல்பட்டு

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.3 லட்சத்தில் எல்இடி விளக்குகள்

DIN

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி புதிய குடியிருப்புகளான வைஷ்ணவி நகா், சக்தி பாலா நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.3 லட்சத்தில் எல்இடி மின் விளக்குகள் 32 இடங்களில் பொருத்தப்பட்டன.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதில் புதிய குடியிருப்புகளான வைஷ்ணவி நகா், சக்தி பாலா நகா் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இரவு நேர மின் வெளிச்சத்துக்காக பேரூராட்சி சாா்பில், ரூ.3 லட்சம் மதிப்பிலான எல்இடி மின் விளக்குகள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) எம்.கேசவன் தலைமையில், பேரூராட்சித் தலைவா்

நந்தினி கரிகாலன் முன்னிலையில், துணைத் தலைவா் எழிலரசன் மின் விளக்குகள் பொருத்தும் பணியைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT