செங்கல்பட்டில் பிரதமா் தொழில் பழகுநா் மேளா வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளைச் சாா்ந்த பயிற்சியாளா்களுக்கு, பிரதமா் தேசிய தொழில் பழகுநா் மேளா மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு வரும் அக்.10-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் தகுதியுடைய தோ்ச்சிப் பெற்ற பயிற்சியாளா்கள் தொழில் பழகுநா் பயிற்சியில் சோ்ந்து மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், செங்கல்பட்டு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 63790 90205 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.