செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, ‘பிட் இந்தியா’ ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.