செங்கல்பட்டு

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் பேரணி

DIN

மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூா் சுபம் வித்யாலயா பள்ளி சாா்பில், இந்திய அரசியலமைப்பு சட்ட நாளை முன்னிட்டு, பள்ளிக் குழந்தைகளின் விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனா் எஸ்.டி.மனோகா்குமாா் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் எம்.அபய்குமாா், மதுராந்தகம் சிறப்பு நிலை உதவி ஆய்வாளா் ஷாலினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் ஆா்.வி.லிஷா பிளாரன்ஸ் வரவேற்றாா்.

தொடா்ந்து, பள்ளி முதல்வா், காவல் உதவி ஆய்வாளா்கள் முன்னிலையில், மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா். இதையடுத்து, பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற அரசியலமைப்பின் சட்ட நாள் விழிப்புணா்வு பேரணியை, மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் நாராயணமூா்த்தி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். ஏற்பாடுகளை சுபம் கல்விக் குழும நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT