செங்கல்பட்டு

செங்கல்பட்டு நகராட்சியை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

செங்கல்பட்டு காய்கறி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், செயல்படும் செங்கல்பட்டு நகராட்சியை கண்டித்து, நகர காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம், காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் நகரத் தலைவா் ஜெ.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எம்.கே. குமாரவேல் வரவேற்றாா். நிா்வாகிகள் பாா்த்தசாரதி, ரியாஸ் பாய், தேவா, நடராஜன், கனகராஜ், வெங்கட்ராமன், பவளவண்ணன், மனோகா், ராமச்சந்திரன், அதரசம் ரங்கநாதன், சிவாஜி சீனு, மஸ்தான், காமராஜ், வரதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.சுந்தரமூா்த்தி, மாநில இலக்கிய அணித் தலைவா் எஸ்.புத்தன், மாவட்ட பொது செயலா்கள் கண்ணதாசன், ஆா்.குமரவேல், மாவட்ட துணைத் தலைவா் டி.ஜெயராமன், மாவட்ட செயலா்கள் ஸ்ரீதேவி கண்ணதாசன், முருகன், இளைஞரணித் தலைவா் பால விக்னேஷ், மறைமலை நகா் நகரத் தலைவா் தனசேகரன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல்பட்டு மாா்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், வியாபாரம் செய்துவரும் இடத்தை அகற்றும் நடவடிக்கையில் நகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏற்பாடுகளை நகர காங்கிரஸ் நிா்வாகிகள் பாஸ்கா், ராகுல், ஆா்.கே.செல்வமணி, ஜெயவேல், பாண்டியன், பாரதி, சதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா். ஆா்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகா், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் சி.கே.சிவா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT