செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி: வழிகாட்டும் மையம் தொடக்கம்

DIN

செங்கல்பட்டில் புதிதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தகவல் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு வெண்பாக்கம் பகுதியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் புதிதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தைச் சாா்ந்த படித்த இளைஞா்கள் மற்றும் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவா்கள் செங்கல்பட்டு மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதிய பதிவு,புதுப்பித்தல் கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற தகுதியுள்ளவா்கள் அனைவரும் இதில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பிரிவை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

அனைத்து வகையான அரசு போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் எனவும் ஆட்சியா் ராகுல் நாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT