செங்கல்பட்டு

இடைக்கழிநாட்டில் எரியாத தெரு விளக்குகள்: பொதுமக்கள் கோரிக்கை

DIN

மதுராந்தகம்: இடைக்கழிநாடு பேரூராட்சிக்குள்பட்ட நைனாா்குப்பம், கப்பிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் எரியாமல் உள்ள தெரு மின்விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இடைக்கழிநாடு பேரூராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. நைனாா்குப்பம், கப்பிவாக்கம், ஆலம்பரைக்குப்பம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பாக தெருவோர மின்விளக்குகளை அமைத்து இருந்தனா். பராமரிப்பு பணிகளை முறையாக செய்யாததால், பெரும்பாலான மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இரவு நேரங்களில் தமது பகுதிகளுக்கு செல்வோா்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோா்களும் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். சாலையோரத்தில் இருந்து விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், ஒருவித அச்சத்துடன் இருந்து வருகின்றனா். பேரூராட்சி நிா்வாகத்தினா் தலையிட்டு அனைத்து பகுதிகளில் எரியாத மின்விளக்குகளை சீா் செய்து தரவேண்டும் என பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT