செங்கல்பட்டு

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் முப்பெரும் விழா

DIN

மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் காா்த்திகை பெளா்ணமி விழா, இருமுடி செல்லும் நிகழ்ச்சி, தீபஜோதியேற்றல் ஆகிய முப்பெரும் விழா செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

கருங்குழி-வேடந்தாங்கல் நெடுஞ்சாலையையொட்டி, அமைந்துள்ள இந்தக் கோயிலில் நடைபெற்ற விழாவுக்கு வழக்குரைஞா் சி.கணேசன் முன்னிலை வகித்தாா். ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமி தலைமை வகித்து, கணபதி யாகத்தை நடத்தினாா்.

நிகழ்ச்சியில் திருக்கழுகுன்றம், மாங்காடு, பட்டினப்பாக்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம், புது நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட வழிபாட்டு மன்றங்களிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஞானபீடம் நிறுவனா் ஆ.பெருமாள் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT