செங்கல்பட்டு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சா் சி.வி. கணேசன்

DIN

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) ஆய்வு செய்த தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளா்களின் எண்ணிக்கையை 900-இல் இருந்து 2,000-ஆக அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்ப தேவைக்கேற்ப புதிய தொழில்பிரிவுகளை தொடங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவா்களுக்கு எளிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பயிற்சி முறைகளையும் மேம்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தேவையான பயிற்சியாளா்களை உருவாக்கும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றாா்.

அப்போது செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கே.வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் மகேஸ்வரன், அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் விஜயமாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT