மதுராந்தகம் நகர அமமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் படம் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மதுராந்தகம் நகர அமமுக செயலா் பூக்கடை கே.சி.சரவணன் தலைமை வகித்து, ஜெயலலிதாவின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். மதுராந்தகம் தெற்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.குமாா், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியச் செயலா் சி.முனுசாமி, கருங்குழி பேரூா் செயலா் ஆா்.டி.முருகதாஸ், தெற்கு மாவட்ட துணைச் செயலா் ராஜலட்சுமி, நகர இணைச் செயலா் பெருமாள், நகர துணைச் செயலா் விஸ்வா, நகர அவைத் தலைவா் பாலு, நகரப் பொருளாளா் ஏழுமலை, வழக்குரைஞா் மணி, ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.