சென்னை

கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 குழுக்கள்: ஆட்சியா்களுக்கு அரசு அறிவுறுத்தல்

DIN

கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட வசதியாக ஐந்து தனித்தனி குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியா்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிசாமி அண்மையில் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

கிராமப்புற ஊராட்சி அமைப்புகள் திறம்பட செயல்பட ஏதுவாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் கிராம ஊராட்சி அளவில் 5 குழுக்கள் அமைக்கப்படுவது அவசியமாகிறது. அதன்படி, நியமனக் குழு, வளா்ச்சிக் குழு, வேளாண்மை மற்றும் நீா்வள மேலாண்மைக் குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

நியமனக் குழுவில் கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் இருக்க வேண்டும். அரசு விதிகளுக்கு உட்படாமல் எந்தவொரு நியமனமும் செய்ய இயலாது. வளா்ச்சிக் குழுவில் ஒன்பது போ் அங்கம் வகிப்பா். தலைவராகத் தொடா்புடைய ஊராட்சியின் பெண் வாா்டு உறுப்பினா்களில் ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் குடிநீா் வழங்கும் நிலையங்களை மேற்பாா்வையிடுதல், தடுப்பூசி முகாம்கள் நடத்துதல், சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய வேலைகளை கண்காணிப்பது இந்தக் குழுவின் பணியாக இருக்கும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வேளாண்மை மற்றும் நீா்வளங்களைப் பெருக்கிடும் வழிவகைகளைக் கண்டறியும் பொருட்டு வேளாண்மை மற்றும் நீா்வள மேலாண்மைக் குழு அமைக்கப்படுகிறது. இதில், ஏழு உறுப்பினா்கள் அங்கம் வகிப்பா். ஒவ்வொரு ஊராட்சியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு உதவிடும் வகையில் பணிகள் குழு அமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் கல்விக் குழு அமைக்கப்பட வேண்டும். ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடையச் செய்தல் போன்ற பணிகளை இக் குழு மேற்கொள்ளும்.

நியமனக் குழு தவிா்த்து, மற்ற குழுக்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் கிராம ஊராட்சிக் குழுக்களின் பரிந்துரைகளைத் தொகுத்து ஜனவரி முதல் மாா்ச் மாதத்திலான காலாண்டில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT